மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் புளியமரத்துபாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மனைவி சித்ரா (44). இவர் சம்பவத்தன்று மொபடில் சந்திரபுரம்-சுல்தான்பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சித்ராவை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சித்ரா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Moped accident in kovai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->