மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் - நடத்துனர்களுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு.!!
minister sivasangar order free travel to disabled persons in govt bus
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளதாவது:-
* மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்திற்காக, பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பொழுது பேருந்தை முறையாக நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். பேருந்து நிலையத்தில் ஒரு மாற்றுத்திறனாளி பயணி பேருந்து நிறுத்தத்தில் நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும்.
* ஓட்டுநர்கள் பேருந்து நிற்பதற்கு என்று அறிவிக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் தான் பேருந்தை நிறுத்த வேண்டும். அதற்கு முன்பாகவோ அல்லது தள்ளியோ நிறுத்தி மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஏறி/இறங்க சிரமம் ஏற்படுத்துக்கூடாது. பேருந்து நடத்துனர் வேண்டும் என்றே பேருந்தில் இடமில்லை என்று கூறி பேருந்தில் ஏறும் மாற்றுத்திறனாளி பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிடக் கூடாது.
* மாற்றுத்திறனாளிகளுக்கு என்று பேருந்தில் ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு மேல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதை அறிவித்து, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய உதவி செய்ய வேண்டும்.
* சாதாரண பயணிகள் மாற்றுத்திறனாளிகள் இருக்கையில் அமர்ந்திருந்தால் அவர்களை கனிவுடன் மாற்று இருக்கைகளில் அமரச்செய்து, மாற்றுத்திறனாளிகளை அந்த இருக்கையில் அமரச் செய்ய வேண்டும்.
* ஓட்டுனர்கள் அல்லது நடத்துனர்கள் மாற்றுத்திறனாளி பயணிகளிடம் அவர்கள் மணம் புண்படும் வகையிலோ, எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ. ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.
* இந்திய அரசு அறிவித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி 40 சதவீதம் மாற்றுத் திறன் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் ஒருவருடன் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில்மட்டும் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவர்கள் இருவருக்கும் உரிய கட்டணமில்லா பயணச் சீட்டினை பேருந்து நடத்துனர் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
English Summary
minister sivasangar order free travel to disabled persons in govt bus