திமுக இரட்டை வேடம் போடுகின்றது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..!
minister jayakumar press meet near veperi
"மதத்தின் பேரால் கலவரம் நடந்தால் அதனை ஆரம்ப காலத்திலேயே தடுத்து தமிழ்நாட்டிற்கு அமைதியை ஏற்படுத்தி தர வேண்டும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரி காவல் ஆணையரகத்தில் அதிமுக சார்பில், கே.சி.பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது,
“ஜாதி, மதம், இன மோதல் இல்லாத அமைதி தவழும் மாநிலமாக தமிழகம் இருந்தது. மாநிலத்தில், மதக்கலவரங்கள் வராமல் காப்பாற்றுவது அரசின் கடமை. எந்த மதமாக இருந்தாலும் இங்கு அந்த மதத்தின் பேரால் கலவரம் நடந்தால் அதனை ஆரம்பக் காலத்திலேயே தடுத்து தமிழ்நாட்டிற்கு அமைதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
கடந்த 2017ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்த அதிமுக அனுமதி வழங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அந்த அமைப்பில் உள்ளவர்கள் தங்களுக்குள் பயிற்சி எடுத்துக்கொள்ளுதல் என்பது வேறு. மாவட்டம் முழுவதும் நடப்பது என்பது வேறு. அப்படிப் பார்த்தால் இன்று ஏகப்பட்ட இடங்களில் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.
இந்த விசயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகின்றது. அதிமுகவை பொறுத்த வரை எந்த பேரணி விசயங்கள் நடந்தாலும் பொது மக்களுக்கு அமைதியை ஏற்படுத்தி தந்தோம். அந்த அமைதியை தற்போது நிலைநாட்டிக் கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
minister jayakumar press meet near veperi