பண்ருட்டி காதல் விவகாரம்.. உயிரிழந்த காதலித்தவரின் தம்பி.! பின்னணியில் பகீர்.!
men murdered by 6 who family cheated his sister
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசித்து வந்த சாந்தகுமார் என்பவர் கடைக்கு செல்ல வெளியே வந்துள்ளார். அப்பொழுது, திடீரென மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்து இருக்கின்றனர்.
இதுகுறித்து, தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் இதில் காதல் விவகாரம் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். ஞானவேல் என்பவருடைய தங்கை அப்பகுதியில் இருக்கும் கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றார். சாந்தகுமாரின் அண்ணன் சக்திவேல் என்பவர் ஞானவேலின் தங்கையை காதலித்து தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.
அத்துடன் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் மீது ஞானவேல் பாலியல் புகார் அளித்து சிறையில் தள்ளினார்.
தங்கையின் வாழ்க்கையை இப்படி சீரழித்த காரணத்தால் ஞானவேல் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு சக்திவேலின் தம்பி சாந்தகுமார் கொலை செய்து இருக்கின்றார். இதுகுறித்து, ஞானவேல் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
men murdered by 6 who family cheated his sister