வீடு முழுதும் மிளகாய்பொடி.. விசாரணையில் திடுக்கிட்ட போலீஸ்.. மோப்ப நாய்க்கே ஆப்பு.!
men murder by his son on thirupattur
30க்கும் அதிகமான வீடுகள், கோடிக்கணக்கான பணம், சுமார் முன்னூறு ஏக்கர் நிலம் இருந்தாலும் மகனின் தேவைக்காக வெறும் ஐந்து லட்சம் கொடுக்காத தந்தை கொலைசெய்யப்பட்டார். இந்த துர்சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
திருப்பத்தூர் அடுத்துள்ள பேராம்பட்டு கிராமத்தில் வசித்துவரும் பாலக்கிருஷ்ணனுக்கு வயது (85).இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு திருப்பத்தூர் பேராம்பட்டு மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் முப்பதுக்கும் அதிகமான வீடுகள், கோடிக்கணக்கான பணம், 300 ஏக்கர் நிலம் ஆகியன இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஐந்தாம் தேதியன்று பாலக்கிருஷ்ணன் அவரது வீட்டினில் கொலைசெய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அதோடு வீடு முழுவதிலும் மிளகாய்ப்பொடி தூவப்பட்டிருந்தது. இதைப்பற்றி தகவலறிந்த காவல்துறையினர் விரைவாக வந்து பாலக்கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததுடன் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கினர்.
விசாரனையின்போது, கொலையான பாலக்கிருஷ்ணனுக்கும் அவருடைய மகன் சேதுவிற்கும் சமீப காலமாக தகராறு இருந்து வந்துள்ளது என்று தெரியவந்தது. பாலக்கிருஷ்ணன் கொலைசெய்யப்பட்டுக்கிடந்த வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. எனவே, காவல்துறையினர் அந்த வீட்டின் சாவியை வைத்திருந்த சேதுமீது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரனையில், அவர் டி.பார்ம் படித்துள்ளார் என்பதும், அவருடைய தந்தைக்கு உதவியாக இருந்துவந்ததும் தெரியவந்திருக்கிறது.
மேற்கொண்டு காவல்துறையினர் கேட்டபோது என் தகப்பனாருக்கு பல்வேறு இடங்களில் ஏக்கர் கணக்கில் இடங்கள் உள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் பணம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனக்கு இரண்டாம் திருமணம் ஆகி ஒரு கைக்குழந்தை உள்ளது என்றும், தான் குடும்பம் நடத்த தந்தையிடம் தான் பணம் கேட்க வேண்டி உள்ளது எனவும், எனவே திருப்பத்தூரில் மருந்து கடை வைக்க ஐந்து லட்சம் பணம் கேட்டேன். அதற்கு வெறும் ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு தகாத முறையில் பேசினார் என்றும்,
இதனால் தான் மிகுந்த ஆத்திரமடந்து அருகே இருந்த மரக்கட்டையால் தலையில் அடித்ததாகவும், இதில் அவர் அங்கேயே விழுந்து இறந்து விட்டதால் உடனே நான் வீட்டிலிருந்த துணிகளையெல்லாம் கலைத்துப்போட்டுவிட்டு மோப்பநாய் கண்டுப்பிடித்துவிடும் என்பதற்காக வீடுமுழுவதும்.மிளகாய்ப்பொடியை தூவிவிட்டு, வீட்டை வெளியே பூட்டிவிட்டு என் வீட்டிற்கு சென்று எதுவும் தெரியாதது போல் மீண்டும் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு சென்றேன். வீட்டைத்திறந்து உள்ளே போய் யாரோ நகை பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு என் தந்தையை கொலை செய்துள்ளதாக நாடகமாடினேன் என்று கூறியுள்ளார்.
English Summary
men murder by his son on thirupattur