சென்னையில் நாளை மறுநாள் மெகா வேலைவாய்ப்பு முகாம்.. 30,000 பேருக்கு பணி நியமனம்.! - Seithipunal
Seithipunal


தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிறது. அதன்படி கலைஞர் பெயரில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில் தனியார் துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 100 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

அதன்படி சென்னையில் மெகா வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.‌ அதன்படி இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை மாநிலக் கல்லூரியில் நாளை மறுநாள் ஜூலை 22ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. 

இந்த வேலை வாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்து முடித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம் எனவும் இதில் கலந்து கொள்ள இலவச அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 30,000க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mega employment camp in Chennai on July 22


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->