எம்பிபிஎஸ் - பிடிஎஸ் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்தாண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இதில், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவர் கடந்த ஜூன் 28ம் தேதி முதல் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் ஜூலை 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்திருந்தது.

இதில், விண்ணப்பிதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், தற்போது எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 12ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கு இதுவரை, அரசு ஒதுக்கீட்டுக்கு 21,514 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 9,398 பேர் என மொத்தம் 30,912 பேர் விண்ணப்பித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MBBS and BDS courses application date extended


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->