38 வருடம் குடும்பத்திற்காக அயல்நாட்டில் உழைத்தவரை, அம்போவென தெருவில் நிறுத்திய சோகம்.!!
Mayiladuthurai man out by home members
தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பரசலூர் கிராமத்தை சார்ந்தவர் நாகராஜன். இவருக்கு குமாரி என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில், நாகராஜன் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் தனது மனைவிக்கு வெளிநாட்டில் பாடுபட்டு பணம் அனுப்பி வந்த நிலையில், சொந்த ஊரில் மாடி வீடு மற்றும் வணிக வளாகம் உள்ளிட்ட ரூ.2 கோடிக்கு சொத்துக்கள் இருந்துள்ளது. இவரது மகன்கள் இருவரும் வெளிநாட்டில் பணியாற்றி வருகின்றனர்.
இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துள்ள நிலையில், சுமார் 38 வருடங்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்காக நாகராஜன் வெளிநாட்டில் பணியாற்றி வந்த நிலையில், முதுமை காரணமாக சொந்த வீட்டிற்கு வந்துள்ளார்.
இவருக்கு ஊருக்கு வந்ததும் சொத்துக்களை தங்களின் பெயரில் மாற்றம் செய்து தரக்கூறி மனைவி மற்றும் குடும்பத்தினர் வற்புறுத்தியதாக தெரியவருகிறது. நாகராஜன் சொத்துக்களை எழுதி கொடுக்க மறுப்பு தெரிவிக்கவே, அவரை வீட்டில் இருந்து குடும்பத்தினர் விரட்டி அடித்துள்ளனர். இந்த குற்றசாட்டை நாகராஜனின் மனைவி மறுப்பு தெரிவித்தாலும், நாகராஜன் வீதியில் தவித்து வருகிறார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Mayiladuthurai man out by home members