தருமபுரம் ஆதீனம் மிரட்டல் வழக்கு - மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் கைது.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் தொடர்பாக ஆபாச வீடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், தனிப்படை போலீசாரால் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் தொடர்பாக ஆபாச வீடியோ உள்ளதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியதாக ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ், தனியார் பள்ளி தாளாளர் குடியரசு உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறை பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான தனிப்படை போலீசாரால் மும்பையில் கைது செய்து உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் செய்யூர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mayiladuthurai district pmk leader akoram arrest in mumbai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->