திருமணமானவர்களுக்கு மீண்டும் அண்ணாமலை தலைமையில் திருமணம்.!! விழுப்புரத்தில் அரங்கேறிய கூத்து.!!
Married couples get married again under Annamalai
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் 39வது பிறந்தநாளை ஒட்டி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஓமந்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் அறக்கட்டளை சார்பில் நேற்று 39 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டுதிருமண ஜோடிகளுக்கு தாலியை எடுத்துக்கொடுத்து திருமணங்களை நடத்திவைத்தார்.
இந்த 39 ஜோடிகளில் சிலர் முன்பே திருமணமானவர்கள் எனவும், அவர்களில் சிலருக்கு குழந்தைகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நேற்று அங்கு திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியின் குழந்தைக்கு இன்று தினம் பிறந்தநாள் விழா கொண்டாட இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் இரு தம்பதிகளுக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில் மீண்டும் அண்ணாமலை தலைமையில் நேற்று திருமணம் செய்துகொண்டதும் தெரியவந்துள்ளது.
அவர்களில் திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான கிறிஸ்டோபர் மற்றும் எபினேசர் இருவருக்கும் ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. அண்ணன் எபினேடருக்கு ஒரு குழந்தையும், தம்பி கிறிஸ்டோபருக்கு இரண்டு குழந்தையும் உள்ளதாம்.
அதே பகுதியைச் சேர்ந்த திவாகர் என்ற இளைஞருக்கும் ஏற்கெனவே மயிலம் கோயிலில் திருமணம் ஆகிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இணையதள வாசிகள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கலாய்த்து வருகின்றனர்.
English Summary
Married couples get married again under Annamalai