திருமண சடங்கும், இறுதி சடங்கும் ஒரே நேரத்தில்?! மணக்கோலத்திலேயே பெண்ணுக்கு ஏற்பட்ட பெரும்துயரம்!! - Seithipunal
Seithipunal


திருச்சி லால்குடி அருகே நன்றி மங்கலத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவர் மகன் ராஜ குரு என்பவர், கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி என்பவரை நிச்சயதார்த்தம் செய்திருந்தார். இன்னிலையில், நேற்றைய தினத்தில் இருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்து லால்குடி ஐயன் வாய்க்கால் அருகில் உள்ள திருமண மண்டபத்தை பதிவு செய்தனர்.

திருமண ஏற்பாடுகள் நடந்தன. இரு குடும்பத்தினரும் பத்திரிக்கை அடித்து அவரவர் உறவினர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து அழைப்பு விடுத்தனர். மணமகள் கனிமொழியின் தந்தை நடராஜனுக்கு தலையில் கட்டி ஏற்பட்டு அவர் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் திருச்சி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். திருமண ஏற்பாடுகள் நடந்து வரவே அப்புறம் நடராஜன் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்னிலையில், திருமண தினத்தன்று நடராஜன் சிகிச்சை பலனின்றி திருச்சி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். அவர் உயிர் இருந்த விஷயம் கனிமொழியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். கனிமொழியின் அண்ணன் திருமணத்திற்கு செல்லாமல் தந்தையுடனேயே மருத்துவமனையில் இருந்து விட்டார். கனிமொழி ராஜகுருவின் திருமணம் நடந்து முடிந்தது.

அனைத்து சடங்குகளும் நிறைவேற்ற பின் நிறைவேற்றப்பட்ட பின் மணமகளின் உறவினர் ஒருவர் இந்த தகவலை அங்கிருந்த சிலரிடம் தெரிவிக்க அது தீயாக பரவியுள்ளது. அதன்பின்னர் மணமகள் வீட்டினர் அனைவரும் கதறி அழுது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.  திருமணத்திற்கு வந்த அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.

இதனை அடுத்து மண்டபத்தில் இருந்த அனைவரும் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று அவரது உடலை ஊருக்கு கொண்டு சென்றனர். நேற்று மாலை நடராஜனின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மண மகள் கனிமொழி இந்த சடங்கில் மணக்கோலத்துடன் கலந்து கொண்டார். மகளின் திருமணம் நடந்த நாளிலேயே தந்தைக்கு மரணம் ஏற்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இது அப்பகுதி பொதுமக்கள் இடையே ஒருவித சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marriage girl father death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->