காவல் நிலையம் முன்பு மன்சூர் அலிகான் திடீர் தர்ணா… காரணம் என்ன?
Mansoor alikhan dharna front of police station
பிரபல நடிகரும் ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இதனால் மன்சூர் அலிகான் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் மன்சூர் அலிகான் ஆதரவாளரை பா.ஜ.கவை சேர்ந்த பிரமுகர் தாக்கியதாக தெரிகிறது.
தனது ஆதரவாளரை தாக்கிய பா.ஜ.க பிரமுகரை கைது செய்ய வேண்டும் என மன்சூர் அலிகான் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் புகாரின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை மன்சூர் அலிகான் திடீரென காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து போலீசார் மன்சூர் அலிகான் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
English Summary
Mansoor alikhan dharna front of police station