செங்கல்பட்டு : குடியால் செயலிழந்த சிறுநீரகம் - மன உளைச்சலில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


குடியால் செயலிழந்த சிறுநீரகம் - மன உளைச்சலில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனால் தம்பதியினருக்கு இடையே அடிக்கடித் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அருண்குமாரின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் அதிகமாகக் குடிக்கத் தொடங்கிய அருண்குமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது சிறுநீரகம் செயலிழந்து விட்டதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சைச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு மனமுடைந்த அருண்குமார், தன்னைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற வருத்தத்தில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் நேற்று குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போல்லீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் விரைந்து வந்து அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man sucide for kidny failure in chengalpattu


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->