இளைஞர் வெட்டி படுகொலை... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்..! - Seithipunal
Seithipunal


பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். தனது செல்போனை பறித்து கொண்டதால் லாசர், சண்முகம் இருவரையும் தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் வெங்கடேசனை கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, இன்று காலை அவரது அண்ணன் கார்த்திக்குடன் செல்லும் போது ஆயுதங்களுடன் அவர்களை துரத்தி யுள்ளனர்.

வெங்கடேஷ் அவர்களிடம் இருந்து தப்பிய நிலையில் கார்த்திகை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஐவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man murdered in Chennai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->