மாமனார் செய்த மோசமான செயல்.. அலறி துடித்த மருமகள்.. அரங்கேறிய விபரீதம்..!!
man kill son's wife for property issue
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கலைவாணி. செந்தில்குமாரின் சித்தப்பா ராமன் இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது சித்தப்பாவுக்கும் செந்திலின் அப்பாவுக்கும் சொத்து தகராறு காரணமாக இருவரும் பேச்சுவார்த்தை இன்றி வாழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில், செந்தில்குமாரை அழைத்த அவரது சித்தப்பா ராமன் உங்கள் வீட்டு முருங்கை மரத்தின் கிளைகள் என் வீட்டின் மேல் உரசுகிறது என்று கூறியிருக்கிறார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகராறில் கோபமடைந்த ராமன் செந்தில்குமார் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து அவரது மனைவி கலைவாணியை கத்தியால் குத்தியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, கலைவாணியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர். ஆனால் கலைவாணியோ சிகிச்சை பலனின்றி பலியானர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
English Summary
man kill son's wife for property issue