உ.பியில் பரபரப்பு || புகார் கொடுக்கச் சென்ற வாலிபர் - பிணமாக திரும்பிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


உ.பியில் பரபரப்பு || புகார் கொடுக்கச் சென்ற வாலிபர் - பிணமாக திரும்பிய சம்பவம்.!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரைச் சேர்ந்த தினேஷ் சிங் பதவுரியா என்ற 28 வயதுடைய வாலிபர் நேற்று மாலை ஹனுமந்த் விஹார் புறக்காவல் நிலையத்திற்கு தனது நிலத்தை பக்கத்துக்கு வீட்டைச் சேர்ந்தவர் ஆக்கிரமித்துள்ளதாக புகார் கொடுக்கச் சென்றார். 

அப்போது காவல் நிலையத்திலிருந்து பொறுப்பாளராக இருந்த அசோக் யாதவ், தினேஷ் சிங் பதவுரியாவை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதையறிந்து அங்கு வந்த பதவுரியாவின் உறவினர்கள் பதவுரியாவை விட்டு விடுமாறு கெஞ்சியுள்ளனர். ஆனால், போலீசார் பதவுரியாவை நீண்ட நேரம் கழித்து அனுப்பியுள்ளனர். 

அப்போது அவரது உடல் நிலை மிக மோசமான நிலையில் இருந்ததையடுத்து பதவுரியா அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், புகார் கொடுக்கச் சென்றவர், காவல் நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்றும், அதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பதவுரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

பின்னர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் கொடுக்கச் சென்ற வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் கான்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man kill in uttar pradesh police station


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->