திருமண அழைப்பிதழ் அளிக்க சென்ற மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட விபரீதம்.. கதறி அழும் உறவினர்கள்.. மனதை ‘உலுக்கும்’ சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மேல்மருவத்தூர் அருகே இளைஞர் ஒருவர் அவரது திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலை விபத்து ஒன்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மேல்வாலை என்னும் கிராமத்தில் வாழ்ந்து வருபவர் ஐயனார். இவர் திருப்போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு இம்மாதம் 12ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. இதனால் அவர் திருமண வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் இன்று அழைப்பிதழ்கள் கொடுக்க திண்டிவனத்திலிருந்து மதுராந்தகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். 

இதனை தொடர்ந்து, அவர் சிறுநாகலூர் என்ற இடத்தில் வரும் போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐயனார் சம்பவ இடத்திலேயே பலியானார். அதன் பின்னர், அவரது உடல் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து, தகவலறிந்து வந்த ஐயனாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஐயனாரின் சடலத்தை பார்த்து கதறியழுத காட்சி, அங்கிருந்தவர்கள் மனதை உலுக்கியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man dies in accident at chengalpattu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->