மதுரை || ஓரினச் சேர்க்கையால் நடந்த விபரீதம் - நண்பரைக் கொலை செய்த நபர் கைது.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள கடச்சனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பைசல் அப்துல்லா பாவத். கல்லூரி மாணவரான இவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த நிலையில், மதுரை அழகர் கோவில் பகுதியில் அழுகிய நிலையில் பைசலின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அவரது நண்பர் ஜெயசீலன் என்பவரிடம் விசாரணை நடத்தினார்.

அதில், ஜெயசீலன் நம்பர் பைசலை கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், ஜெயசீலன் மற்றும் பைசல் இடையே ஓரினச்சேர்க்கை உறவு இருந்ததும், அவர்கள் இருவரும் உல்லாசமாக இருக்கும் வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக பைசல் மிரட்டியதனால், அதிர்ச்சி அடைந்த ஜெயசீலன் அழகர் கோவில் மலைப்பகுதிக்கு பைசலை அழைத்துச் சென்று கொலை செய்த பின் மலையில் இருந்து கீழே தள்ளி விட்டது தெரிய வந்தது. 

இதையடுத்து காவல்துறையினர் ஜெயசீலன் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for murder in madurai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->