மதுரை அருகே பரபரப்பு - அக்காவைக் கொலை செய்த தம்பி - கள்ளகாதலனால் வந்த வினை.!
man arrested for murder in madurai
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அருகே கொம்பாடி கிராமத்தில் நந்தி பெருமாள் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். கட்டிட வேலை செய்து வந்த இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் மகாலட்சுமி குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை வேறு ஒருவருக்கு மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், மஹாலக்ஷ்மி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
அப்போது மீண்டும் தனது காதலன் சதீஷ்குமார் உடன் செல்போன் மூலம் பேசத் தொடங்கி இருக்கிறார். இதையறிந்த மகாலட்சுமியின் தம்பி பிரவீன் குமார் இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரும் தங்கள் காதலை தொடர்ந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார் நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய சதீஷ்குமாரை வழிமறித்து கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார். மேலும், அவரது தலையை துண்டித்து நாடக அரங்கத்தில் வைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, வீட்டிற்கு சென்ற பிரவீன் தனது அக்கா மகாலட்சுமியையும் கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளார். இதனை தடுக்க வந்த தாயையும் கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ்குமாரின் அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த பிரவீன்குமாரின் தாயை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இரு வேறு சமூகங்களுக்கு இடையே கொலை நடந்திருப்பதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது
English Summary
man arrested for murder in madurai