விழுப்புரம் || முன் விரோதத்தால் பறிபோன தம்பி உயிர் - அண்ணனின் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் || முன் விரோதத்தால் பறிபோன தம்பி உயிர் - அண்ணனின் வெறிச்செயல்.!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியை அடுத்த கூடுவாம்பூண்டி கிராமத்தில் முருகன் என்பவர் சலூன் கடை ஒன்று வைத்து நடத்தி வந்தார். இவருக்கும் இவரது உடன் பிறந்த அண்ணன் விநாயகம் என்பவருக்கும் சொத்து பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் முருகன் வழக்கம் போல் நேற்று தனது சலூன் கடையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த விநாயகம் முருகனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விநாயகம் சலூன் கடையிலிருந்து கத்திரிக்கோலை எடுத்து முருகனின் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். 

இதனால், முருகன் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை உடனே அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முருகனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தம்பியை கொலை செய்த அண்ணன் விநாயகத்தை கைது செய்தனர். அவரிடம் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill brother in vizhupuram


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->