பழனியில் பரபரப்பு - அரசு மருத்துவரைக் கொடூரமாகத் தாக்கி பணம், நகை கொள்ளைபடித்த வாலிபர் கைது.!
man arrested for attck govt doctor and gold money robbery in palani
பழனியில் பரபரப்பு - அரசு மருத்துவரைக் கொடூரமாகத் தாக்கி பணம், நகை கொள்ளைபடித்த வாலிபர் கைது.!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி வருபவர் உதயகுமார். இவர் கடந்த 14-ம் தேதி இரவு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரை சரமாரியாகத் தாக்கி, கட்டி போட்டு விட்டு வீட்டில் இருந்த நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலத்த காயத்துடன் இருந்த மருத்துவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போலீசார் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மருத்துவரின் முன்னாள் கார் ஓட்டுநர் சரவணன் என்பவரை பிடித்து விசாரித்து வந்தனர். அப்போது சரவணன் மருத்துவர் உதயகுமார் வீட்டில் மேலும் சிலருடன் சேர்ந்து கொள்ளையடித்தது உறுதியானது.
இதையடுத்து போலீசார் சரவணனிடம் இருந்து 34 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி மற்றும் 7 லட்ச ரூபாய் பணம்,ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் போலீஸார் சரவணனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்ததுடன், கொள்ளையில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.
English Summary
man arrested for attck govt doctor and gold money robbery in palani