கள்ள காதலி சொன்ன ஒற்றை வார்த்தை.. ஆத்திரம் அடைந்து கொலை செய்த போலீஸ்காரர்.! மதுரையில் பகீர் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் சதாசிவம் நகரைச் சேர்ந்த பொன் பாண்டி என்பவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் பொன்பாண்டி ஒரு விபத்தில் நான்காண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். பெண் சரண்யா போடி மரைக்காமலைப்பகுதியில் வனப்பகுதி கண்காணிப்பாளராக வேலையில் சேர்ந்தார்.

மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த திரு முருகன் என்பவர் காவல்துறையில் அவருடன் பணி செய்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்த ஆரம்பித்துள்ளனர். அதன்பின் திருமுருகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்து குழந்தை பிறந்தது. ஆனால் அவர் சரண்யாவுடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளாமல் இருந்து வந்தார்.

இதன் காரணமாக திருமுருகனின் மனைவி பிரிந்து பின்னர் திருமுருகன் சரண்யா வீட்டிற்கு சென்றதும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருமுருகன் சரண்யாவை கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் தானே சரணடைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai women murdered


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->