உற்சாகமாக நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு.. திமிறி எழும் காளைகளை, தட்டி அமுக்கும் இளைஞர்கள்.!!
madurai palamedu jalikat festival
தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு பொங்கல் பண்டிகையின் போது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது இயல்பான ஒன்றாகும். கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக ஜல்லிக்கட்டை தடை செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு ஜல்லிக்கட்டு இன்று மக்களுக்காக, தமிழர்களுக்காக ஜல்லிக்கட்டுபோட்டிகள் மீண்டும் நடைபெற்று வருகிறது. இதற்க்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக ஏற்பாடுகள் பலமாக நடைபெற்று வந்தது. நேற்று காலை சுமார் 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி, மாலை 4.30 மணிவரை போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் 700 காளைகள் மற்றும் 730 வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிகட்டுப்போட்டி நடைபெறும் இடங்களில் அமரும் மாடம், அலங்கார வளைவு, ஒலிபெருக்கி, சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள், மருத்துவ முகாம்கள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளது. நேற்றைய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது வெகு விமர்சையாக நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற வீரர்களில் 55 பேர் காயமடைந்துள்ள நிலையில், 10 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் பங்கேற்று சிறந்த மாடுபிடி வீரராக 14 காளைகளை அடக்கிய ஜெய்கிந்த்புரம் பகுதியை சார்ந்த விஜய்க்கு இரு சக்கர வாகனமும், 13 காளைகளை அடக்கிய விளாங்குடி பகுதியை சார்ந்த பரத்துக்கு பீரோ பரிசாகவும், 10 காளைகளை அடக்கிய முத்துப்பட்டி பகுதியை சார்ந்த திருநாவுக்கரசுக்கு பீரோ பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு காலை துவங்கியது. இந்த போட்டியில் சுமார் 700 காளைகளும், 923 வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 1500 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
madurai palamedu jalikat festival