தூங்கிக்கொண்டிருந்த நபர்.. அம்மா அலறல் என சத்தம்.. விரைந்து சென்றவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


திருமங்கலத்தில் கணவனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் உச்சப்பட்டி பகுதியில் இலங்கை முகாம் உள்ளது. இந்த முகமை சார்ந்தவர் சிவராஜி. இவருக்கு திருமணம் முடிந்து 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். 

இந்த நிலையில், சிவராஜிற்கு சென்னையை சார்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்த நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கால் போனில் அதிகநேரம் பேசி வந்துள்ளனர். 

இந்த விஷயத்தை அறிந்த மனைவி கேதீஸ்வரி, கணவரை கண்டித்த நிலையில், அவர் கேட்டதாக தெரியவில்லை. இதனால் தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தம்பதிக்குள் சண்டை ஏற்பட்டு, பின்னர் இரவு சிவராஜி தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். 

சண்டையால் ஆத்திரத்தில் இருந்த கேதீஸ்வரி, தனது கணவரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். சிவராஜின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உயிருக்கு போராடிய சிவராஜை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கேதிஸ்வரியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai man murder due to affair police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->