மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலித்தொல்லை.. நோயாளிகளின் உணவுகளை பதம்பார்க்கும் எலிகள்.!!
Madurai Govt Rajaji Hospital Mouse Torture on Woman Out Patients Ward 9 May 2021
அரசு மருத்துவமனையில் பெண்களுக்கான பொதுவார்டில் எலிகள் துள்ளி விளையாடுவதால் நோயாளிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில், தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு கொரோனா நோயாளிகளுக்கான தனிவார்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பெண்களுக்கான பொதுவான வார்டில் பிற சிகிச்சைக்கான நோயாளிகள் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் போன்றவற்றை சாப்பிட கொடுக்கும் நிலையில், அவர்கள் சாப்பிட்டுவிட்டு மீதம் வைத்துள்ள உணவுகளை எலிகள் எடுத்து சாப்பிட்டு செல்லும் அவலம் நடந்து வருகிறது.
மேலும், அரசு மருத்துவமனை நமது மருத்துவமனை என்பதையும் மறந்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் பெண்கள் மற்றும் உறவினர்கள் உணவுப் பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு செல்லும் நிலையில், மருத்துவமனை ஊழியர்களும் அலட்சியத்தில் ஈடுபட்டு வருவதால் எலிகள் துள்ளி விளையாடி வருகிறது.
தாங்கள் பத்திரப்படுத்தி வைத்துள்ள பிரட் மற்றும் பழங்கள் போன்றவற்றை எலிகள் சாப்பிட்டு விடுவருவதாகவும், நோயாளிகளின் உறவினர் ஒருவர் வீடியோ எடுத்து இதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததை தொடர்ந்து மேற்கூறிய அவலம் வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியான சுமார் நான்கு மணி நேரத்திற்கு பின்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Madurai Govt Rajaji Hospital Mouse Torture on Woman Out Patients Ward 9 May 2021