நட்பூவிற்கு தாராள பிரபுவாக செயல்பட்டு, வெதும்பிப்போன சோகம்.. தம்பி தரவே இல்லையாம்..!!
Madurai friend cheats Jewels
மதுரையில் உள்ள வடக்கு ஆவணி மூலவீதி பகுதியை சார்ந்தவர் சுரேஷ் பாலன். இவரது நண்பர் மணிகண்டன். மணிகண்டனிற்கு சொந்தமாக நகைக்கடை இருக்கிறது. மணிகண்டனும், சுரேஷ் பாலனும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், மணிகண்டனிடம் சுரேஷ் பாலன் அவசரம் என்று கூறி 40 சவரன் நகையை பெற்றுள்ளார். நண்பரின் மீது இருந்த நன்மதிப்பின் காரணமாக மணிகண்டனும் யோசனை செய்யாமல் நகையை வழங்கியுள்ளார். நகையை மீண்டும் திருப்பி கேட்ட சமயத்தில், சுரேஷ் பல காரணத்தை கூறி சமாளித்து வந்துள்ளார்.
நண்பரின் மீது இருந்த நம்பிக்கை அனைத்தும் பொய்த்துவிடவே, விரக்தியடைந்த மணிகண்டன் அங்குள்ள திலகர்திடல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai friend cheats Jewels