டீக்கடையில் திமுக உடன்பிறப்பு அரெஸ்ட்.. வாக்காளர் லிஸ்ட், பணத்துடன் பரபரப்பு கைது.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், மதுரையில் உள்ள காலங்கரையில் அரசியல் கட்சியை சார்ந்தவர் பணப்பட்டுவாடா செய்வதாக இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

இதன்போது, அங்குள்ள தேநீர்கடை முன்பு நின்றுகொண்டு இருந்த விசாலட்ச்சிபுரம் பகுதியை சார்ந்த திமுக பிரமுகர் ரவிச்சந்திரனிடம் (வயது 62) வாக்காளர் பட்டியல் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பாக மதுரை வடக்குநிலை கண்காணிப்பு குழு அதிகாரி, தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai DMK Supporter Arrest by Flying squad 3 April 2021


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->