உரிய பதில் வரவில்லை என்றால், இலஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு பரிந்துரை... டி.என்.பி.எஸ்.சிக்கு மதுரை நீதிமன்றம் பகிரங்க எச்சரிக்கை.!
Madurai Court Warn TNPSC 27 November 2020
டி.என்.பி.எஸ்.சி தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, மதுரை உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொலைதூர கல்வியில் பயின்று வரும் நபர்களுக்கு, தமிழ்வழி கல்வியில் பயின்று வரும் நபர்களின் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் பணிகள் நியமனம் செய்யப்படுவது சரியானதாக இருக்காது என்றும், இதனை இரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்த மனுவானது இன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், " பட்டப்படிப்பு முடித்துவிட்டு தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்?.
கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று கல்வி கற்று 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? என்ற விபரங்களை டி.என்.பி.எஸ்.சி தெரிவிக்க வேண்டும். இது குறித்த விபரங்கள் முழுவதுமாக தெரிவிக்கப்பட வேண்டும்.
இந்த விஷயங்களில் சரியான பதில் வரவில்லை என்றால் விசாரணைக்கு உத்தரவிட நேரிடும். இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத்துறை விசாரணைக்கும் பரிந்துரை செய்ய நேரிடும் " என்று கூறி உச்சபட்ச எச்சரிக்கையை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் பதிவு செய்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai Court Warn TNPSC 27 November 2020