மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் 5‌ ஆண்டுக்கு பின் தொடங்கியது.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் பிரதமர் நரேந்திர மோடியால் மாற்றப்பட்டது.

அடிக்கல் நாட்டிய பிறகு கட்டுமான பணிகள் தொடங்கப்படாததால் அரசியல் ரீதியில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தன கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படாத கண்டித்து ஒற்றை செங்கலுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது. எல்&டி நிறுவனம் மூலம் கீழ தளம் மற்றும் 10 அடுக்குமாடிகள் 870 படுக்கை வசதிகளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. 

அடுத்து 33 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை முடிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai AIIMS hospital construction work started


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->