மதுரையில் ஒரே நாளிலில் 3 இளம்பெண்கள் மாயம்.! போலீசார் தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதில் உள்ள திருவள்ளுவர் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது மகள் அபிநயா திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அபிநயாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கததால், சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்துக்கு பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

அதே போன்று, பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஜிவா தெருவை சேர்ந்தவர் சண்முகலட்சுமி. இவரது மகள் சங்கீதா வீட்டில் இருந்து வெளியே சென்று நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. 

பெற்றோகள் தோழிகள், உறவினர்கள் வீடுகள் என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சண்முகலட்சுமி சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதேபோன்று மதுரை மாவட்டம் கரிமேடு பொன்னகரம் பிராட்வே பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் சுவேதா(வயது20) பட்டப்படிப்பு முடித்த நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்துள்ளார். 

இந்நிலையில், சுவேதா திடீரென மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை கரிமேடு காவல் துறைக்கு புகார் தெரிவித்ததில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இவ்வாறுமதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று இளம் பெண்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai 3 young girls missing


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->