குட்கா வழக்கு.. 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பீங்களா? - நீதிமன்றம் கண்டனம்.!!
Madrashc condemns CBI Gutka corruption case
கடந்த அதிமுக ஆட்சியில் குட்கா முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர்கள் ரமணா விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு கடந்த முறை சென்னை சிபிஎஸ் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது முன்னாள் அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைத்திருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் தெரிவிக்கப்பட்டது. இதனால் கடுப்பான நீதிபதிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரணைக்காக ஒப்புதல் வழங்கவில்லை என வழுக்கை இழுத்தடிப்பதாக சி வி ஐ க்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மீண்டும் ஒத்திவைத்தனர்.
English Summary
Madrashc condemns CBI Gutka corruption case