#தமிழகம் | ஒருநாள் மழைக்கே உடைந்து விழுந்த கழிவுநீர் வடிகால் சுவர்! வைரலாகும் வீடியோ!
maathampalaiyam drainage issue
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்டு வந்த கழிவுநீர் வடிகால், நேற்று பெய்த கனமழையால் இடிந்து விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 300 மீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் வடிகால் கூட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணி தரமற்ற முறையில் நடைபெறுவதாக அப்பகுதி வாசிகள் ஏற்கனவே புகார் அளித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று பெய்த கனமழையில் கழிவுநீர் வடிகால் சுவர் இடிந்து விழுந்து சேதம் ஆகியது. இது குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த காணொளியில் நபர் ஒருவர் தனது கையால் தொட்ட உடனே, அந்த சுவர் உடைந்து விடும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்த வடிகால் பணியை தரமான முறையில் அமைத்து தரவேண்டும் என்று அந்த பகுதிவாசிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
English Summary
maathampalaiyam drainage issue