பேருந்தில் வெளியேறிய கரும்புகை.. அச்சமடைந்த பயணிகள்.. தலை தெறிக்க ஓட்டம்..!! - Seithipunal
Seithipunal


கோவையில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து அன்னூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பேருந்தின் எஞ்சின் பகுதியில் கரும்புகை வெளியேறியது. அதிகளவில் கரும்புகை வெளியேறியதால், அச்சமடைந்த பயணிகள் பேருந்திலிருந்து கீழே இறங்கி தலை தெறிக்க ஓடினர்.

இருப்பினும் பேருந்தில் தீ விபத்து ஏற்படாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்து எஞ்ஜின் பகுதி இருந்து ரேடியேட்டரில் தண்ணீர் அல்லது கூலன்ட் ஆயில் குறைந்தால் வெப்பமடைந்து அதிகளவில் புகை வெளியேற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். தனியார் பேருந்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியதால் அச்சமடைந்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்த சம்பவம் அன்னூர் ஒரு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lot of smoke came out from private bus causing panic


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->