திருவள்ளூர்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த லாரி ஓட்டுநர்.! போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த லாரி ஓட்டுநரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கச்சனங்குப்பம் பகுதியை சேர்ந்த 12 வயதுடைய சிறுமி 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்று உள்ளார். அப்பொழுது அங்கிருந்த வாலிபர் ஒருவர் சிறுமியிடம் பேச்சு கொடுத்தபடியே அருகில் இருந்த லாரிக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து சிறுமி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சடைந்த பெற்றோர், இது குறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதே பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் செந்தில் என்பவரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lorry driver arrested for sexually harassing girl in tiruvallur


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->