சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த ஆசாமி.! அலேக்காக தூக்கிய போலீசார். - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் விக்ரமங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசா விக்கிரமங்கலம் மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து (40) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் மாரிமுத்துவின் வீட்டின் பின்புறம், மது பாட்டில்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Liquor seller arrest in Ariyalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->