கணவனால் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்த மனைவி ..!
lady pettition for family security
நாகை மாவட்டம் திருக்கண்ணப்புரம் அருகே விசலுார் ராராத்திமங்கலம் புதுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ், உமா தம்பதிகள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ரமேஷ், உமா மற்றும் அவரின் குழந்தைகளுக்கு எந்தவித பொருளாதார உதவியும் செய்யாமல், அந்த பெண் வீட்டிலேயே வசித்து வந்திருக்கிறார். மேலும், உமா மற்றும் இரு குழந்தைகளையும் அடித்து துன்புறுத்துகிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது உமாவை தாக்கி உள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த உமா, நாகை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ,இது தொடர்பாக உமா தனது பிள்ளைகளுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து மனு அளித்துள்ளார். அந்த மனுவில், "நானும் எனது குழந்தைகளும் பாதுகாப்பு இன்றி உள்ளோம். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்".என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
lady pettition for family security