ஓ.பி.எஸ். வெற்றி பெறுவது நிச்சயம்... பா.ஜ.க வேட்பாளர பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal



நீலகிரி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் எல். முருகன் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் மேட்டுப்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, தமிழகம் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை, புரட்சியை ஏற்படுத்தும் தேர்தலாக இந்த மக்களவைத் தேர்தல் அமையும். 

வரலாற்றை மாற்றும் தேர்தலாகவும் இந்த தேர்தல் இருக்கும். தற்போது நீலகிரி எம்.பியாக இருக்கும் ஆ. ராசா இந்த தொகுதிக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. கூடலூர் பகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை.

பழங்குடியின கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கூட அவர் செய்து கொடுக்கவில்லை. நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இருண்ட காலம் முடிந்து எப்போது நமக்கு பிரகாசமான காலம் வரும் என்ற ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அதற்கான விடிவு காலம் பிறக்கப் போகிறது. ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் வெற்றி உறுதி. 

தோல்வி பயத்தில் தி.மு.க., அ.தி.மு.க தான் அவருக்கு எதிராக அவரது பெயரில் 5 நபர்களை இறக்கி உள்ளனர். எத்தனை பேர் வந்தாலும் நிச்சயமாக பாராளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

L Murugan speech viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->