கவுண்டிங் முடிந்து 100 வது நாளில் இது நடக்கும் - அண்ணாமலை அதிரடி பேச்சு!
Kovai Annamalai Election Campaign 2024
கோவையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் திறக்கப்படும் என அண்ணாமலை வாக்குறுதி அளித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் தெரிவிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வலிமையாக அமர வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சியில் அமரும்போது இந்த கோவை மேலும் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும்.
அதற்காக நீங்கள் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தின் அரசியலை மாற்றக்கூடிய சின்னம் தாமரை என்பதை மறந்து விடாதீர்கள்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் சில விவகாரங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 100 நாட்களில் போதை தடுப்பு பிரிவின் மத்திய அரசு அலுவலகம் கோவையில் திறக்கப்படும். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
சமூக விரோதிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு பாரதிய ஜனதா கட்சி தான் ஆட்சிக்கு வர வேண்டும். மமற்ற கட்சிகளை பொறுத்த வரை சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. இன்றைக்கு சமூக விரோதிகளுக்கும் திமுகவினருக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது" என்று அண்ணாமலை பேசினார்.
English Summary
Kovai Annamalai Election Campaign 2024