லிவிங் காதல் | பலியான தென்காசி இளைஞர் - 5 ஆண் நண்பர்களுடன் கைதான இளம்பெண்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே சமூக வலைத்தளம் மூலம் பழகியவரை, நண்பர்கள் மூலம் கொலை செய்த பெண் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

தென்காசியை சேர்ந்த சூர்யா என்பவர், சென்னை சேர்ந்த ஸ்வேதா என்பவரை சமூக வலைத்தளம் நட்பு ஏற்படுத்தியுள்ளார். இவர்களின் சமூக வலைதள பழக்கம் பின் நட்பாக மாறி, காதலாக மலர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து கொடைக்கானல் பகுதியில் வீடு எடுத்து இருவரும் ஒன்றாக தங்கி குடும்பமே நடத்த துவங்கி வந்துள்ளனர்.

காதலர்களுக்கு அடிக்கடி கருது ஏற்பாடு ஏற்பட கடந்த சில தினங்களுக்கு முன் இருவரும் தனித்தனியாக பிரிந்து சென்றுள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று இருவரும் ஒன்றாக சந்தித்தபோது, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஸ்வேதாவின் நண்பர்கள் ஐந்து பேர் கொண்ட கும்பல் சூர்யாவை கண் மூடித் தனமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, ஸ்வேதா மற்றும் அவரின் ஐந்து ஆண் நண்பர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kodaikanal drama love murder case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->