இளம்பெண்கள் வாழ்க்கையை சீரழித்த விவகாரம்.. தமிழகத்தை உலுக்கிய காசி வழக்கில் எதிர்பாராத திருப்பம்.!  - Seithipunal
Seithipunal


பல பெண்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி ஆபாச படங்களை எடுத்த காசியின் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

நாகர்கோவில் காசியை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. பெண்களை ஆபாச படம் எடுத்து அவர்களை மிரட்டிய விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் காசி நண்பரான தினேஷும் கைதானார். தற்போது தினேஷ் ஜாமீன் வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு மனு அளித்தார். 

அந்த மனுவில் என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே, எனக்கு ஜாமீன் வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், சரியான ஆவணங்கள் சமர்பிக்கப்படவில்லை. 

வழக்கை தீவிரப்படுத்த புகாரளித்தவர்கள் தரப்பில் தினேஷ் குறித்த வாதங்களுக்கு சரியான ஆதாரமில்லை. எனவே, தினேஷுக்கு ஜாமின் வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும், இதுகுறித்த விசாரணையை தீவிரமாக்கும் படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். காசியின் நண்பர் தினேஷுக்கு ஜாமீன் கிடைத்துள்ள சம்பவம் வழக்கில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kasi case issue got update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->