அலப்பறை செய்து விட்டு, அப்பாவி போல வீடியோ.. காலால் வாகனம் ஓட்டியவரை கதறவைத்த காவல்துறை.!!
Kanyakumari Youngster arrest by police driving legs handling two wheeler
கல்குளம் பகுதியில் காலால் வாகனத்தை இயக்கிய இளைஞர், காவல் துறையினரின் கவனிப்பிற்கு பின்னர் அபாய செயல்களில் ஈடுபடக்கூடாது என்று புத்திமதி வழங்குகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம் மூலச்சம் பகுதியை சார்ந்த இளைஞர் பிரிட்டோ. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, நான்கு சக்கர வாகனமான வேனை இரண்டு கால்களால் இயக்கியுள்ளார்.
மேலும், குத்து பாடலுக்கு வாயை அசைத்தபடி, இருக்கையில் படுத்தபடி வாகனத்தை பிரிட்டோ இயக்கிய நிலையில், இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வந்தது. இதனைக்கண்ட காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
இதனால் பிரிட்டோவிற்கு பயம் ஏற்பட்ட நிலையில், காவல் துறையினர் பிரிட்டோவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். இதனையடுத்து தனது தவறை உணர்ந்துவிட்டதாக கூறி, இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanyakumari Youngster arrest by police driving legs handling two wheeler