அண்ணன்-தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் தம்பிக்கு நேர்ந்த சோகம்! போலீசார் விசாரணை!
Kanyakumari stabbed death brother arrested
இரணியல் அருகே உள்ள கண்டன்விளை குழியூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 68). இவருக்கு ஜேம்ஸ் ராஜா (வயது 35) மற்றும் சகாய செல்வன் (வயது 33) என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் கட்டிட தொழில் செய்து வருபவர்கள். இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் இருவரும் அடிக்கடி மது அருந்துவர்.
இருவரும் மது அருந்தி விட்டு, கடந்த 9-ந் தேதி மாலை வீட்டுக்கு வந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜேம்ஸ் ராஜா அருகில் இருந்த மது பாட்டிலை எடுத்து அதனை உடைத்து சகாய செல்வன் கழுத்தில் குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சகாய செல்வன், கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து இவரை மீட்டு ஆச்சாரிய பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சகாய செல்வன், சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதனை அடுத்து கொலை முயற்சி வழக்கில் ஜேம்ஸ் ராஜா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Kanyakumari stabbed death brother arrested