கன்னியாகுமரி | பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த முதியவர்!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி, வடக்குதாமரைக்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 85) இவரது மனைவி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். 

இவரது இரண்டு மகன்களும் திருமணமான நிலையில் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் இவர் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் துர்நாற்றம் வீசி உள்ளது. 

 

இதனை உணர்ந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இது குறித்து அவரது மகன் முருகசுந்தரத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அவர் விரைந்து வந்து பார்த்தபோது வீடு பூட்டி இருந்தது. 

இதனை தொடர்ந்து அவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் கழிவறை அருகே பழனி இறந்த நிலையில் கிடந்துள்ளார். 

மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனை அடுத்து முருகச்சந்திரன் தென்தாமரைகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆச்சரியபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி

மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தந்தை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்து விட்டதாக முருகசுந்தரம் போலீசாரிடம் புகார் கொடுத்ததில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Old man lying dead locked house


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->