ஊரே கொரோனா பீதியில் கலகலக்க., கதகளி ஆடிய கட்டில்..! கதவை திறந்த அதிகாரிகளுக்கு ஷாக்.!! - Seithipunal
Seithipunal


தமிழகமே கொரோனா இரண்டாம் கட்ட பரவல் அச்சத்தில் உள்ள நிலையில், விடுதியில் விபச்சாரம் நடந்து வந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பாலமோர் சாலையில் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக வடசேரி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில், விடுதியில் 3 பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்தது உறுதியானது. விபசாரத்தில் ஈடுபட்டு இருந்த கோட்டார் பகுதியை சார்ந்த திரவியம் (வயது 62), ராஜப்பன், சாம்சன், சேகர், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். 

விசாரணையில், திரவியம் விடுதியின் மேலாளர் என்பது உறுதியான நிலையில், ராஜப்பன் என்பவர் விடுதியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். மீதமுள்ள மூவரும் 3 பெண்களிடம் உல்லாசமாக இருக்க வந்துள்ளனர். 

இந்த விடுதியின் மேலாளர் ஏழை நிலையில் உள்ள பெண்களை குறிவைத்து பணத்தாசை காண்பித்து ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளியதும் விசாரணையில் உறுதியானது. இதனையடுத்து மீட்கப்பட்ட பெண்களை காவல் துறையினர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். விடுதியின் மேலாளர், பணியாளர், பிற 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanyakumari Nagarcoil Vadasery Lodge Prostitution Police Arrest Hotel Manager and Worker 19 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->