ஓசூரில் சர்வசாதாரணமாக கஞ்சா வளர்த்த விவசயிகள்! கம்பி என்னும் சோகம்!
Kanja in agricultural land at hosur
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி அருகே அட்டப்பள்ளம் என்னும் கிராமத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பண்டி கங்காதருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து, தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான அஞ்செட்டி போலீசார், அட்டப்பள்ளம் கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் மிளகாய் தோட்டம், கனகாம்பரம் பூ தோட்டத்தில் ஆங்காங்கே சந்தேகிக்காத வகையில் கஞ்சா செடிகளை அங்கமுத்து, கோவிந்தன் என்ற இரண்டு விவசயிகள் பயிரிட்டிருந்தது தெரிய வந்தது.
பின்னர் அவர்களை கைது செய்த போலிசார், மிளகாய் தோட்டம் மற்றும் கனகாம்பரம் பூ தோட்டத்தில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, அவற்றைத் தீயிட்டு கொளுத்தி அழித்தனர்.
English Summary
Kanja in agricultural land at hosur