நாங்கள் மீட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை..! கனிமொழி நெகிழ்ச்சி பதிவு! - Seithipunal
Seithipunal


மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் சிக்கிக் கொண்டிருந்தார். 

நிறை மாத கர்ப்பிணியை மீட்பு படையினருடன் சேர்ந்து மீட்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

ஸ்ரீ வைகுண்ட பகுதியை சேர்ந்த அனுசியா-பெருமாள் தம்பதியினருக்கு ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அனுசியா வீடு முழுவதும் மழை வெள்ளத்தால் சூழ்ந்து கொண்டது. 

இது குறித்து தகவல் அறிந்த இந்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் கனிமொழி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிறைமாத கர்ப்பிணியை பத்திரமாக மீட்டனர். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பின்னர் மதுரை விமான நிலையத்தை வந்தடைந்த அவர்களை மாவட்ட ஆட்சியர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். 

அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததாக கனிமொழி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi rescued pregnant woman born boy baby


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->