#புதுக்கோட்டை || ஜன.2ல் நடைபெறவிருந்த கந்தர்வகோட்டை ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு..!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தச்சனங்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் புத்தாண்டை ஒட்டி தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து வரும் ஜனவரி 2ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என விழா குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள்.

இந்த நிலையில் வரும் ஜனவரி 2ம் தேதி நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என விழா குழு அறிவித்துள்ளது. தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட தச்சனங்குறிச்சி ஜல்லிக்கட்டுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விழா குழு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்பொழுது ரத்து செய்யப்பட்டது ஜல்லிக்கட்டு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kandarvakottai Jallikattu postponement


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->