நடுரோட்டில் மனைவிக்கு அடி, உதை..! பெண் போலீசிடம் கணவரை விட்டுவிட வலியுடன், கண்ணீரால் துடித்த மனைவி.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள சாலையில், 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அவரது மனைவியுடன் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். இதன்போது அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே போதையில் இருந்த அந்த ஆசாமி தனது மனைவியின் கன்னத்தில் பளார் என அறைந்தார். பின்னர், அவரின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்று, அவரது கழுத்தில் இருந்த தாலிக்கயிற்றை அறுத்து ரகளையில் ஈடுபட்டார். 

அவ்வழியாக எதற்ச்சையாக வந்த பெண் காவல் அதிகாரி, இதனைக்கண்டு வாலிபரை பிடித்து விசாரித்துள்ளார். விசாரணையில், இருவரும் திருச்சியை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, வாலிபரை பெண் காவல் அதிகாரி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து செல்ல முற்பட்டுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி கணவர் தன்னை தாக்கி, தன் தாலியை பறித்த சூழலியும் காவல் அதிகாரியிடம் கணவரை விட்டுவிடக்கூறி கெஞ்சினார். இதனையடுத்து, வாலிபரை எச்சரித்த பெண் காவல் அதிகாரி, மனைவியுடன் அமைதியாக வீட்டுக்கு செல்ல கூறி அறிவுறுத்தி அங்கிருந்து சென்றார். 

பின்னர், இரண்டு பெரும் திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி சென்றனர். இந்த சம்பவம் நடுரோட்டில் அரங்கேறிய நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், சம்பவ இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Wife Husband Fight on Bus stand Lady Cop Solve it


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->