கள்ளக்குறிச்சி: ஓட்டுநர்கள் அலட்சியத்தால் துடிதுடித்து பறிபோன உயிர்.! அரவம் தெரியாமல் புதைத்த சம்பவம்.!
Kallakkurichchi old men death accidentally
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அசகளத்தூர் என்ற கிராமத்தில் 70 வயது முதியவர் கடந்த 21ம் தேதி சாலையை கடக்க முயற்சித்தபோது டிராக்டர் மோதி படுகாயம் அடைந்துள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். பின்னர் காவல்துறையினருக்கு தெரியாமல் உறவினர்கள் முதியவரின் சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் புகார் அளிக்க காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் காவல்துறைக்கு தெரியாமல் அடக்கம் செய்யப்பட்ட முதியவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்து கள்ளக்குறிச்சி தாசில்தார் முன்னிலையில் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
இதன் முடிவில் அவர் விபத்தில் அடிபட்டு இறந்தது தெரியவந்துள்ளது. ஆனால் பலியானவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. அவர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அசகளத்தூர் பகுதியில் வசித்து வந்த அவர் அங்குள்ள மக்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டுவிட்டு வசித்து வந்தது தெரியவந்துள்ளது.
English Summary
Kallakkurichchi old men death accidentally