காஞ்சிபுரம் தாதா ஸ்ரீதரின் தம்பி படுகொலை! கொலையாளிகளை தேடிய வழக்கில் புதிய திருப்பம்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் திருப்பருத்திகுன்றத்தைச் சேர்ந்த பிரபல தாதா ஸ்ரீதர் காஞ்சிபுரம் மாவட்டத்தை தன் கட்டுக்குள் வைத்து, ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டி பறந்தார். பல வழக்குகள் சம்பந்தமாக தேடப்பட்டு வந்த நிலையில் கம்போடியா நாட்டில் ஓராண்டுக்கு முன் ஸ்ரீதர் தற்கொலை செய்தார். ஸ்ரீதரின் சித்தப்பா மகனான கருணாகரன் காஞ்சிபுரம் வணிகர் தெருவில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். 

இவரது கடையில் மேல்கதிர்பூரைச் சேர்ந்த விக்னேஷ், என்பவர் பணிபுரிகிறார். இந்நிலையில், நேற்று மாலை 10 பேர் கொண்ட கும்பல் கருணாகரன் கடைக்கு சென்று அவரை தாக்கியது. தப்பிச் செல்ல முயன்ற கருணாகரனை கடைக்கு வெளியில் வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது. தடுக்க முயன்ற விக்னேசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தகவலறிந்த சிவ காஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த கொலை நடந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் ஓடும் பஸ்சில் வைத்து சதிஷ் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் அடுத்த தாமல் கிராமத்தை சேர்ந்த மணிமாறன், காந்தி, மணிமாறன், விஜய், துளசிராம் ஆகிய 5 பேர் வேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kachipuram murder 5 persons surrender in court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->